திருவண்ணாமலை

இந்திய ஆட்சியர் தேர்வில் வெற்றி பெற விரும்பிய ஒரு மாணவியை ஊக்குவிக்க தனது வாகனத்தில் ஆட்சியாளர் அமர வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

 

சென்ற வருடம் பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது.  இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் கந்தசாமி கலந்துக் கொண்டு பரிசுகளை வழங்கி உள்ளார்.  அப்போது பரிசு பெற்ற மாணவிகளில் ஒருவரான மோனிஷா தனக்கு ஐ ஏ எஸ் படித்து தேர்ச்சி பெற்று கந்தசாமி போல் தானும் மாவட்ட ஆட்சியாளராக ஆசை என குறிப்பிட்டார்.

இதைக் கேட்டு கந்தசாமி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.  அந்த மாணைவியை ஊக்குவிக்க அவர் தனது அரசு வாகனத்தில் தனது இருக்கையில் அவரை அமர வைத்து அவர் முன் தான் கைகட்டி நிற்பதைப் போல் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.   இந்த புகைப்படத்தின் ஒரு பிரதியை மாணவியிடம் அளித்த கந்தசாமி இது வெறும் நிழல்தான் எனவும் அந்த மாணவி நன்கு படித்து இதை நிஜமாக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.