சென்னை:

பிப்.8 முதல் அனைத்து வகுப்புகளும் முழுமையாக திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து, பிப்ரவரி 8 முதல் பள்ளி கல்லூரிகள் முழுமையாக திறக்கலாம் என்று அரசாங்கம் அறிவித்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை என அனைத்து வகுப்புகளும் 8 ஆம் தேதி முதல் தொடங்கும். இதற்கான அட்டவணையும் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

அதாவது BE, BTECH, ME, MTECH முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8 ஆம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15 ஆம் தேதியும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5 ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.