கொரோனா ஊரடங்கால் கல்விநிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர் களுக்கு பருவத்தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழகஅரசு குழு அமைத்து ஆராய்ந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் அந்த குழுவினர் முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். அதில், கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதாலும், உயர்கல்வி செல்ல வேண்டிய கட்டாயத்தி னாலும், தற்போது தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக பரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கும் வகையில், இறுதியாண்டு இறு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும்,
பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும்,
இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்,
முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்,
எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்,
இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.