சென்னை: சென்னை அருகே பிரபல தனியார் கல்லூரியில் மாணவர்கள் துப்பாக்கி, வீச்சரிவாளுடன் மோதிக் கொண்ட சம்பtம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அருகே உள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள  எஸ்.ஆர்.எம் கல்லூரியை  தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பெரிய குடும்பத்து பிள்ளைகள், பணக்காரர்களின் வாரிசுகள் இந்த கல்வி நிலையத்தில் அதிகம் படித்து வருகின்றனர்.

இந் நிலையில் மாணவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக எம்பிஏ 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் காலேஜ் கேன்டீனுக்குள்யே செமத்தியாக அடித்து கொண்டனர்.

இரு குழுக்களாக பிரிந்து கொண்டு அவர்கள் மோதினர், மாணவர்கள் சண்டை போட்டால் வழக்கமாக கம்புகள் இருக்கும், கிரிக்கெட் மட்டைகள் இருக்கும்.

அதையும் தாண்டி அதிகப்பட்சமாக அருகில் இருக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு வீசி அடித்துக் கொள்வார்கள். ஆனால் இங்கோ… மாணவர்களில் ஒரு பிரிவினரிடம் துப்பாக்கியும், மற்றொரு குரூப்பிடம் வீச்சரிவாளும் இருந்திருக்கிறது.

மோதலில் மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டுள்ளார். எதற்கான இந்த மோதல் என்பது குறித்த விவரங்கள் வெளியாக வில்லை. போலீசார் விசாரணையை துவக்கி இருக்கின்றனர்.