கொழும்பு:

ள்ளாட்சியில் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமானால் முழு நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்சேவின் நண்பர் கூறியதாக நடிகை மதுசா ராமசிங்கே குற்றம்சாட்டியிருப்பது இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மகிந்த ராஜபக்சே தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட  மாஜி சிங்கள நடிகை மதுசா ராமசிங்கே விரும்பினார்.

மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரிடம் நடிகை மதுசா தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். ராஜபக்சேவின் நண்பரோ, நடிகை மதுசாவை, சல்லாபத்துக்கு அழைத்து,  முழு நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் தி சண்டே லீடர் ஏட்டின் இணைய பதிப்பில் நடிகை மதுசா கூறியிருப்பதாவது,

“ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்காக நான் உழைத்திருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததால் நாமும் போட்டியிடலாம் என முடிவெடுத்தேன். ஆனால் ராஜபக்சேவின் நண்பரோ என்னை நிர்வாணமாக நிற்க வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

இந்த கொடுமையை மகிந்த ராஜபக்சேவிடமும் தெரிவித்தேன்.  அவரோ கண்டுகொள்ளவே இல்லை. சாரி என்று மட்டும் கூறினார்.  என்னை நிர்வாணமாக நிற்க சொன்ன நபர் மீது ராஜபக்சே எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை” என்று ஆதங்கத்துடன் தெரிவித்திருக்கிறார்  நடிகை மதுசா.