மேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியை இன்று (செப்டம்பர் 11)கார்த்திக்குமார், வித்யூராமன் உள்ளிட்டவர்கள் நடத்துகின்றனர். மேடையேற தயாராக இருக்கும் காமெடியன்கள் பற்றிய குட்டுக்கள் அம்பலமாகி இருக்கிறது.
அபிஷேக் குமார்
காம்டியன்கள் பட்டியலில் பிரபலமான பெயர்களில் ஒன்று அபிஷேக் குமார். பெக்கி என்று பலரால் அழைக்கப்படு கிறார். தொழில் முறை ஸ்டான்ட் அப் காமெடி செய்பவர், நடிகர் மற்றும் மேடை நாடக நடிப்பு பயிற்சியாளர். சென்னையைச் சேர்ந்த அபிஷேக், அவரது அதி உற்சாகமான நகைச்சுவை, உடல் சார் நகைச்சுவை மற்றும் குடும்பங்களுக்குப் பிடித்த சுத்தமான நகைச்சுவைக்குப் பெயர் பெற்றவர்.
அபிஷேக்கின் முதல் நிகழ்ச்சி ஒரு விபத்தே. நகைச்சுவை செய்யவிருந்த ஒரு நகைச்சுவையாளர் வர முடியாமல் போனதால் அவருக்கு பதிலாக அபிஷேக் மேடையேறினார். அந்த 15 நிமிட நிகழ்ச்சிக்குப் பின், அபிஷேக் கிட்டத்தட்ட 100 ஸ்டான்ட் அப் நிகழ்ச்சிகளுக்கும் அதிகமாக மேடை யேற்றியுள்ளார்.


வெப் சீரிஸ், தொழில் முறை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்க ளிலும் இவர் பங்கேற்றுள்ளார். அரவின் எஸ் ஏ, கார்த்திக் குமார், பிரவீன் குமார், நவீன் ரிச்சர்ட், அஸீம் பன்னத்வாலா, சோனாலி தாக்கர், அபீஷ் மாத்யூ உள்ளிட்ட பிரபலமான நகைச்சுவையா ளர்களின் நிகழ்ச்சிகளில் சிறிய அறிமுக நகைச்சுவை நிகழ்ச்சியுடன் துவக்கி வைத்துள்ளார்.
தமிழ் நகைச்சுவை சூழலில் அடுத்த பெரிய பிரபலம் அபிஷேக் தான் என்கிற வதந்தி உலவி வருகிறது. அபிஷேக் பல வதந்திகளையும் உலவ விடுவதில் பெயர் பெற்றவர். அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியில் மேடையேற தயாராக இருக்கும் அபிஷேக், இந்நிகழ்ச்சியின் நம்பிக்கைக்குரிய போட்டியாளர்களில் ஒருவர்.

கார்த்திகேயன் துரை
சென்னை ஆவடியின் நகைச்சுவையான ஆண்களில் ஒருவர் கே.டி என்கிற கார்த் திகேயன் துரை. சென்னையில் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் கே.டி, இங்கிருக்கும் பல பிரபலமானவர்களின் நிகழ்ச்சிகளில் அறிமுகம் கொடுத் துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, மிகவும் அழகான, மிகவும் வேடிக்கையான நகைச்சுவையாளர் என்று அவரது அம்மாவால் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார். இவரது அம்மாவோ இவரது நிகழ்ச்சிகளை, ஏன் ஒத்திகைகளைக் கூட பார்த்ததில்லை.
கே.டி தனது வாழ்க்கையின் அனுபவங் களிலிருந்து அவதானித்து கதை சொல்லும் நகைச்சுவை செய்பவர். இந்த வகை நகைச்சுவை பல ரசிகர்களைச் சென்றடையும், ஏன் பிறக்காத குழந்தைக்குக் கூட புரியும். ஆம், இதுதான் இவரது திறமை. அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியில் மட்டுமே இவர் தனது திறமைகளை மேடையேற்றுவதைப் பார்க்க முடியும். பாருங்கள்.
அண்ணாமலை லக்‌ஷ்மணன்:
அண்ணாமலை லக்‌ஷ்மணன் என்கிற மல, முறையான ஸ்டான்ட் அப் காமெடியில் முதல் தமிழ் மொழி பேசிய ஸ்டான்ட் அப் நகைச் சுவையாளர். ஓப்பன் மைக், பொது நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை செய்திருப்பவர். தமிழ், ஆங்கிலம் மற்றும் நகைச்சுவை ஆகிய மூன்று மொழிகளை சரளமாகப் பேசுபவர். (இதில் நகைச்சுவை என்பது நகைச்சுவைக்காக குறிப்பிடப் பட்டுள்ளது).
எழுத்தாளராக தனது தொழில் வாழ்க்கை யை ஆரம்பித்த அண்ணா மலை தற்போது முழு நேர நகைச் சுவையாளராக மாறிக் கொண்டிருக் கிறார். அவரது வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கி ன்றன ஆனால் தனது மக்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் மீதான அவரது அன்பு மட்டுமே நிலையாக உள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியில் அண்ணாமலையைக் காணத் தயாராகுங்கள். உங்களுக்கு கிச்சுகிச்சு மூட்ட அவர் தயாராக இருக்கிறார்.