சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு  கடுமையான காய்ச்சல் காரணமாக  சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிக்கப்பட்டு வந்த நிலையில்,   சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இன்று கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,  நல்லக்கண்ணுக்கு சாதாரணக் காய்ச்சலாகத்தான் இருக்கும், யாரும்  அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.