சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கம்யூனிஸ்டு மூத்த தலைவரான தா. பாண்டியன்  உடல் நலக்குறைவு காரணமாக  நேற்று  சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தா.பாண்டியன் கடந்த பல ஆண்டுகளாக  சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார். அவ்வப்போது  டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது திடீரென அவருக்கு   சிறுநீரக பாதிப்பு அதிகரித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.