லண்டன்:

குடியேற்ற விதிகளில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து பிரிட்டன் உள்துறை அமைச்சர், தனது பதவியை  ராஜினாமா செய்துள்ளார்.

பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் தெரசா மே. இவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் ஆம்பர் ரூட். அண்மையில், இவர் மீது முறைகேடு புகார்கள் எழுந்தன. பிரிட்டனில் வசிப்பதற்கு சட்ட விரோதமான முறையில் குடியுரிமை அளித்தது தொடர்பான பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.

இந்நிலையில்,   ஆம்பர் ரூட், தனது பதவியில் இருந்து நேற்று விலகினார். இதுகுறித்து  பிரதமர் தெரசா மேவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். கடிதத்தை பெற்றுக் கொண்ட பிரிட்டன் பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ஆம்பர் ரூட்டின் பதவி விலகல் கடிதத்தை பிரதமர் தெரசா மே ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.