சென்னை:
1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை, குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.

மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது, குறைவான நாட்களே எஞ்சியிருக்கும் என்பதால், பாடத்திட்டத்தை கணிசமாக குறைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ( SCERT ) ஈடுபட்டிருந்தது.

பாடத்தின் முக்கிய பகுதிகளில் மாற்றமின்றி, எடுத்துக்காட்டுகள் மற்றும் விரிவான விளக்கங்களை குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாட வாரியாகவும், வகுப்பு வாரியாகவும் 40%-க்கு மேல் குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த முழு விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.