சென்னை,

பிரபல தொழில்அதிபர் சேகர் ரெட்டி மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறையினரின் அதிரடி சோதனையை தொடர்ந்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு உதவியாக அவரது கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு  டிச.21-ந் தேதி 3 பெரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சேகர் ரெட்டி மீதான வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது சேகர்ரெட்டிக்கு ஜாமின் மறுத்தது சிபிஐ கோர்ட்டு.

இந்நிலையில் சேகர் ரெட்டி மீதான வழக்கு இன்று சென்னை சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சேகர்ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும், அவருடன் அவரது நண்பர்களான  சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோருக்கும் சென்னை சிபிஐ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.