உத்தர பிரதேசம்:
காங்கிரஸ் தலைவர் ஷியோராஜ் ஜீவன், கடந்த மாதம் நான்கு பேரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 19 வயது பெண்ணின் பூல்கரி கிராமத்திலிருந்து, உள்ளூர் மக்களை தூண்ட முயன்றதாக கேமராவில் சிக்கியவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் மாவட்டத்தில் சாதி வன்முறையை தூண்டும் நோக்கத்துடன், கற்பழித்து கொலை செய்யப்பட்ட மனிஷா வால்மீகியின் குடும்பத்தினரையும், ஒட்டுமொத்த வால்மீகி சமூகத்தையும் தூண்டிவிடும் வகையில், இவர் பல ஆத்திரமூட்டும் வார்த்தைகளை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

ஷியோராஜ் ஜீவன் மத்திய அமைச்சரவையில் முன்னாள் மாநில அமைச்சராக இருந்து, தற்போது அகில இந்திய காங்கிரஸ் குழுவின் தேசிய செயலாளராக உள்ளார்.

இவர் 19 வயது மனிஷா வால்மீகி நான்கு பேரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பூல்கரி கிராமத்தை சந்தித்து மக்களைத் தூண்டிவிட்டதாக ஹத்ராஸ் காவல்துறை இவர் மீது தேச தரோக வாழ்க்கை பதிவு செய்துள்ளது.

ஷியோராஜ் ஜீவன் மீது இந்த வழக்கு நேற்று இரவு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை முன்னாள் மாநில அமைச்சர் மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஷியோராஜ் ஜீவன் மாநிலத்தில் மக்களிடையே சாதி மத மோதலை உருவாக்க நினைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சாதி மத அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்த யார் நினைத்தாலும், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள், என் மாநிலத்தில் யாரையும் நான் சட்டத்துடன் விளையாட அனுமதிக்க முடியாது என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது

அகில இந்திய காங்கிரஸ் கட்சி நேற்று முன்னாள் அமைச்சர் டிபி ஜெயச்சந்திரா மற்றும் மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டிகே ரவியின் மனைவி எச் குசுமா ஆகியோரை கர்நாடகாவின் சிரா மற்றும் ராஜேஸ்வரி நகாரா சட்டமன்ற தொகுதிகளில் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல உறுப்புகள் செயலிழக்கபட்டதன் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் டீ சத்தியநாராயணா உயிரிழந்ததால் தும்காரு மாவட்டத்திலுள்ள சிரா தொகுதியில் தற்போது தேர்தல் நடைபெறுகிறது.

ஆர் ஆர் நகாராவின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான முனிரத்தினம் நாயுடு காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்து ஆளும் பாஜகவுக்கு சென்றுள்ளார். மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியான குசுமா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அக்டோபர் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, நவம்பர் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்த பின்பும் பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் மெத்தனமாக உள்ளது.