டில்லி:

தேசிய கீதத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  ரிபின் போரா எம்.பி. தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார்.

தேசிய கீதத்தில் வரும்  “சிந்த்” என்ற வார்த்தையை திருத்தம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் கோரி தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார்.

 

சிந்த் என்ற வார்த்தை நாட்டின் எந்த பகுதியையும் குறிப்படவில்லை என்றும், சிந்த் என்ற வார்த்தையை, வடகிழக்கு இந்தியாவை குறிக்கும் உத்தர்புர்வ் என மாற்றம் செய்ய வேண்டும் என அந்த தனி நபர் திருத்த தீர்மானத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.