டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  குலாம்நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை  1,12,161 பேர் மரணத்தை தழுவிய நிலையில், இதுவரை  64,53,780 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், தனக்கு பாசிடிவ் என சோதனை முடிவு வந்ததும்,  மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும்,  தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.