சென்னை:

2ஜி வழக்கில் விடுதலையான தன்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து சொன்னதாக கனிமொழி கூறி உள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழிக்கு பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில், பவார் மகள் சுப்ரியா இனிப்பு கொடுத்து வாழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, வழக்கில் இருந்து விடுதலையான தனக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார் என்று கூறினார்.

மேலும், தனக்கு தற்போதுதான் மன நிம்மதி ஏற்பட்டதாகவும் கூறினார்.

தீர்ப்பு குறிதது பேசிய கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வளவு நாளும் எல்லோருமே கஷ்டப்பட்டு விட்டோம். இந்த வழக்கு நிச்சயம் பொய்யான வழக்குதான். இப்போது தர்மம் வென்றது. நீதிவென்றது. அதன் மூலம் அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்