புதுடெல்லி:
விவசாயிகள் செங்கோட்டைக்குள் செல்லும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று காவல் துறைக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், தங்கள் அறிவித்தபடி டெல்லியை நோக்கி படையெடுக்கும் டிராக்டர் பேரணியில் ஜனவரி 26ஆம் தேதி நடத்தினர்.

இந்த பேரணியின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தன. இதில் காவலர்கள் உள்பட பலர் காயமடைந்தனர். இந்த போராட்டத்தின் போது, டெல்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் காலிஸ்தான் கொடியை ஏற்றினர் என சமூக ஊடகங்களில் பலர் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, விவசாயிகள் செங்கோட்டைக்குள் செல்லும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று காவல் துறைக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.