சென்னை:

ன்னியாகுமரி தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ வசந்த குமார், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணனை  தோற்கடித்து அமோகமாக  வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து இன்று தனது எம்எல்ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்கிறார். கடந்த சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வசந்தகுமார். அவர் இன்று காலை   காலை 10.30 மணியளவில் சபாநாயகர் தனபாலை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளார்.

இதையடுத்து நாங்குநேரிதொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்படும். அடுத்த 6 மாதத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.