சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழகத்தின் சூழல் குறித்தும் கேட்டறிந்தார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். கொரோனா தொற்று பரவிவரும் இந்த சூழலில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திமுக தொண்டர்களும், தமிழக மக்களுக்கும் எச்சரிக்கையுடம் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தமிழக நிலைமையை கேட்டறிந்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், சோனியா காந்தியின் உடல்நலத்தையும் குடும்பத்தினர் அனைவர் நலத்தையும் கேட்டறிந்தார்.

இந்த சூழ்நிலையில் இருந்து இந்திய மக்கள் விரைவில் மீள்வார்கள் என்று  இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்து தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.