டில்லி,

டந்த நவம்பர் 20ந்தேதி நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும,  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுப்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி ராகுல்காந்தி இன்று தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக தற்போது சோனியா காந்தி இருந்து வருகிறார். அவரது உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுலை நியமிக்கலாம் என பலவாறாக கருத்து கூறப்பட்டு வந்தது.

சோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் கட்சியின் மூத்த தலைவர்களும் கோரி வந்தனர்.

இந்நிலையில், தீபாவளி முடிந்ததும் ராகுல் தலைமையேற்பார் என கூறப்பட்டு வந்தது.

இந்த  நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில்  கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கான தேர்தல் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.

ராகுல்காந்தி  கடந்த 2013-ம் ஆண்டு முதல் துணை தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் தேர்தலின்போது ராகுல்காந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவராக முடி சூட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை, மத்திய தேர்தல் பிரிவு தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஏற்கனவே அறிவித்துள்ளார்

அதன்படி, தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தேதி: டிசம்பர் 1 என்றும்,  வேட்பு மனுத்தாக்கலுக்கான கடைசி தேதி: டிசம்பர் 4ந்தேதி என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

வேட்புமனுக்கள் குறித்த  ஆய்வு டிசம்பர் 5ந்தேதி நடைபெறும்,

வேட்புமனு வாபஸ் தேதி டிசம்பர் 11ந்தேதி என்றும் கூறப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தலைவர் பதவிக்கான  தேர்தல் டிசம்பர் 16ந்தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 19ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ராகுலை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாதபட்சத்தில், தேர்தல் நடைபெறாமல் ராகுல் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.