காந்திநகர்:

‘‘பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் மதிக்கிறது. அதனால் தான் மணிசங்கர் அய்யர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என ராகுல்காந்தி கூறினார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று குஜராத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், ‘‘எங்கள் கட்சி பிரதமர் மோடியை மதிக்கிறது. அதனால் தான் மணிசங்கர் அய்யர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமர் பதவிக்கு காங்கிரசு மரியாதை செலுத்துகிறது.

தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி கட்சியில் இருக்கும் யாரும் அவருக்கு எதிராக பேச முடியாது. மோடி எங்களைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது, அதனால்தான் மணிசங்கர் அய்யர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்.

குஜராத் நலனுக்காக தேர்தல் அறிக்கை வெளியிட பாஜக தயாராக இல்லை. பா.ஜ.க. உங்களுக்காக ஒன்றும் செய்யாது. தேர்தலில் வெற்றி பெற்ற 10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடிக்கு ஒரு கொள்கை வகுக்கப்படும்’’ என்றார்.