சென்னை:
திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை சற்று நேரத்தில் அறிவிக்கப்படும்.

ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி ஆகியோர்சென்றனா். மு.க.ஸ்டாலினுடன் 40 நிமிடங்களுக்கு மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் தினேஷ் குண்டுராவ் கூறியது:

திமுகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் இன்று காலை 10 மணியளவில் கையெழுத்திட உள்ளோம். காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் என்பது உள்பட அனைத்து விவரங்களையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு கூறுகிறோம் என்றார்.

இந்நிலையில், திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை சற்று நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.