டெல்லி: ரபேல் ஜெட் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு, காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்களில், முதல் கட்டமாக 5 விமானங்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்தன. அரியானா மாநிலம் அம்பாலா விமான படை தளத்திற்கு  அந்த விமானங்கள் முறைப்படி வந்தன. முறைப்படி அந்த விமானங்களுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
ரபேலின் வருகைக்கு  பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்தார். இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை என்றும் அவர் புகழாரம் சூட்டினார். இந் நிலையில்  ரபேல் ஜெட் விமானங்களை பெற்ற இந்திய விமானப்படைக்கு, காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வாழ்த்தில், 2012ல் ரபேலை அடையாளம் கண்டு வாங்குவதில், காங்கிரஸ் அரசாங்கத்தின் உழைப்பு இறுதியாக பலனைத் தந்தது என்று கூறப்பட்டுள்ளது.