சென்னை,

டிகர் விஷால் இன்று ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார். நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து நடிகர் விஷால் இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார் நடிகர் விஷால். அப்போது,  முன்னாள் நிர்வாகிகளான நடிகர் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராதாரவி  சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்வு காணும் வரை ராதாரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது.

ஆனால், கோர்ட்டு உத்தரவை மீறி ராதாரவியை நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்ர் விஷார்.

இதையடுத்து, நடிகர் விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, விஷால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் தரப்பில் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் விஷால் வரும் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

அதன்படி இன்று நடிகர் விஷால் உயர்நீதி மன்றத்தில் ஆஜர் ஆனார். இந்நிலையில் வழக்கு விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Dailyhunt