பிக்பாஸ் வீட்டில் தொடங்கிய கோழி பண்ணை டாஸ்க் ஒருவழியாக முடிவடைந்தது.
இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பாலாவின் விளையாட்டை பாராட்டி பேசினர். அப்போது பேசிய ஆரி, தம்பி பாலா ரொம்ப சுவாரஸ்யமா விளையாடினான் என்று கூறினார். பிறகு பேசிய பாலா, ஷிவானியை பாராட்டி பேசினார். ரூல்ஸ் பிரேக் செய்யாமல் ஷிவானி விளையாடியதாக பாலாஜி கூறினார்.
#Day74 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Spu4O9MzKy
— Vijay Television (@vijaytelevision) December 17, 2020
ஷிவானி மற்றும் கேபி ஆகிய இருவரும் இந்த வாரம் ஈடுபாடு இல்லாமல் இருந்தனர் என கூறி ஜெயிலுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றனர். இது தற்போது வெளிவந்து இருக்கும் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.
#Day74 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/BelFWJrGQb
— Vijay Television (@vijaytelevision) December 17, 2020
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் ஷிவானி மற்றும் கேபிக்கு இடையே சில விரிசல் ஏற்பட்டது. இந்த மாதிரி நேரத்தில் சக ஹவுஸ்மேட்ஸ் வெளியே இருந்து சிறையில் உள்ளவர்களிடம் வாக்குவாதம் செய்வார்கள். அப்படி இன்றைய நாளில் ஷிவானி மற்றும் கேபியிடம் யார் மாட்டுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.