a
 
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அந்த கடிதத்தில், “அதிமுக ஆட்சியில் மக்கள் யாருக்கும் அஞ்சிடாமல் சமூக பாதுகாப்புடன் வாழ்கிறார்கள்.  அதிமுக அரசின் திட்டங்களை பல இந்திய மாநிலங்கள் பின்பற்ற முயற்சிக்கின்றன. அதிமுக. வின் தேர்தல் அறிக்கை தீர ஆலோசித்து தயாரிக்கப்பட்டது தமிழகத்தின் திட்டங்களை பாராட்டி மத்திய அரசு ஏராளமான விருதுகளை அளித்துள்ளது.
234 தொகுதிகளிலும் நானே வேட்பாளராக நிற்பதாக உணர்ந்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற தொண்டர்கள் அனைவரும் கடமையாற்ற வேண்டும்” என்று எழுதியுள்ளார்.