சென்னை:
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக அதிரித்துள்ளது.

சென்னையில் இன்று (பிப்ரவரி 13 ஆம் தேதி) பெட்ரோல் லிட்டருக்கு 90.70 ரூபாய், டீசல் லிட்டருக்கு 83.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் கடந்த நான்கு நாட்களாக அதிகரித்து வந்த பெட்ரோல் விலை 5வது நாளான இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.70 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 83.86 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ.100ஐ எட்டும் என்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.