பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வித்யாசமான ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. வழக்கம் போல இதிலும் பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. இந்த வாரம் B for Ball, C for Catch என்ற புதிய டாஸ்க் வழங்கப்பட்டது.

இந்த டாஸ்க் இரவு முழுவதும் நடக்கும் என பிக் பாஸ் அறிவித்ததால் அனைவருக்கும் ஷாக் ஏற்பட்டது. இரண்டு அணியினரும் வெளியில் வந்து படுத்துவிட்டனர். ரியோ டீம் வெளியில் தூங்கி கொண்டு இருந்தபோது பாலாஜி டீம் அங்கு ஜாலியாக பாட்டு பாடி, காமெடி செய்து கலகலப்பாக இருந்தனர்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், தூங்கிக்கொண்டிருந்த சோம் டாஸ்க் வரும் தருணத்தில் ஓடிச் சென்று பந்தை பிடிக்கிறார். LED-யில் போட்டியாளர்களின் பெயர் வந்துகொண்டிருக்க, பந்தை பிடிக்கச்செல்கின்றனர். ரம்யா பந்தை யார் பிடித்தது என்ற புதிய பிரச்சனையும் கிளம்புகிறது.

தூங்காதே தம்பி தூங்காதே பாடலும் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் போடப்பட்டு உள்ளது. அதன் பின் பந்தை பிடிக்கும் டாஸ்க் முடிக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு வேறு ஒரு வில்லங்கமான டாஸ்க் வழங்கப்பட்டது.

இந்த டாஸ்கில் செயல்பட்ட விதத்தின் அடிப்படையில் போட்டியாளர்கள் விவாதித்து ஒன்று முதல் ஒன்பது வரை வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டது.

சொன்னதை மீண்டும் சொல்ல மாட்டேன் என ரியோ சொல்ல அதற்காக ஆரி அவருடன் வாக்குவாதம் செய்கிறார். இதுக்கு பேரு தான் கார்னர் என ஆரி பற்றி புகார் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிடுகிறார் ரியோ.