சென்னை:

மிழகத்தில் கடந்த சில வாரங்களாக  தொடர் பனி பெய்து வருவதால் மல்லிகை பூக்கள் மொட்டிலேய கருகிவிடுகிறது. இதன் காரணமாக  பூக்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் தேவை அதிகரித்து உள்ளதால், சாதாரண நாட்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் கூட தற்போது  ரூ.800 முதல் ரூ. 2500 வரை விற்பனை ஆகி வருவதாக கூறப்படுகிறது. மல்லிகைப் பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு  ரூ.3500க்கு ஈரோடு சந்தையில்  விற்பனையாகி வருகிறது.

மல்லிகைகு பெயர் பெற்றது மதுரை. மதுரை மல்லி என்றாலே அதற்கு தனி வாசம் உண்டு. அதையடுத்து  ஈரோடு மாவட்டமும் பூக்களுக்கு பெயர் போனது. இங்கு பூக்களுக்கான சந்தை உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர், சத்தியமங்கலம், கெஞ்சனூர் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர்செடிகள் பயிரிடப்பட்டு வருவதே பிரதான தொழிலாக நடை பெற்று வருகிறது. இதில் சுமார்  25ஆயிரம் ஏக்கருக்கு மேலாக மல்லிகை பயிரிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்கு விளையும் மல்லிகை பூ தமிழ்நாட்டில் அனை‌த்து‌ப் பகுதிகளுக்கு‌ம் செல்வது மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக செல்கிறது. குறிப்பாக இங்குள்ள மல்லிகைக்கு திருவனந்தபுரம், கொல்கத்தாவில் கிராக்கி அதிகம்.

இந்த ஆண்டு பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை மொட்டுக்கள் கருவி விடுவதால், மல்லிகையின் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த நிலையில், மல்லிகைப் பூ கிலோ ரூ.3500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தையிலும் பூக்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.  இங்கு, மல்லிகை, பிச்சி மல்லி, பிச்சி மல்லி, சாம்பங்கி, ரோஜா, நேரியம் (அரளி மலர்), தாமரை,  வாடாமல்லி, கிரேந்தி, சம்ப) உட்பட பல்வேறு மலர்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

இங்கு சுமார் 40 டன் மலர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இங்கும் மலர்களின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. பூக்களின் விலை சாதாரண நாட்களை விட தற்போது அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறைந்த பட்சம் கிலோ பூவின் விலை ரூ.800 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்படுகிறது.