சென்னை:

ப்பந்தம் முடிந்த சுங்கச்சாவடிகளில், சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழக போக்குவரத்து துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக போக்குவரத்து துறை சார்பில் போக்குவரத்து துறை சார்பில் 30வது சாலை பாதுகாப்பு வார நிகழ்ச்சி பிப்ரவரி 4ந்தேதி முதல்  10ம் தேதி வரை ஒரு வாரம் நடைபெறுகிறது.

இதையொட்டி இன்று  சென்னை சேப்பாக்கம் முதல் தீவுதிடல் வரை இரு சக்கர வாகன  விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்  தொடங்கி வைத்தார். அப்போது சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  சுங்கச்சாவடிகளில் ஒப்பந்தம் முடிந்த பிறகும், கட்டண வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். பொதுவாக அவ்வாறு கட்டணம் வசூல் செய்ய மாட்டார்கள் என்ற அமைச்சர் அதுகுறித்து தகவல் வந்தால் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.