டில்லி,

ணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும் என மத்திய அரசின், பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்க பல கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டன. சேமிப்பு கணக்கில் இருந்து வாரத்துக்கு  ரூ. 24 ஆயிரம்வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.

இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இதுபோன்ற கட்டுபாடுகளை  நீக்குவது குறித்து ரிசர்வ் வங்கி விரைவில் முடிவெடுக்கும் என்று பொருளாதாரத்துறை செயலாளர் சக்தி கந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறியதாவது,

ரூபாய் நோட்டு தடைக்கு பின், நாட்டில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் ஏறக்குறைய முடியும் தருவாயில் இருக்கிறது. இப்போது வங்கியில் இருந்தும், ஏ.டி.எம். களில் இருந்தும் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் மட்டுமே வங்கியில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாரத்துக்கு ரூ.24 ஆயிரமும், மாதத்துக்கு ரூ. 96 ஆயிரமும் எடுத்து வருகிறார்கள். சிலர் ஒரு லட்சம் வரைகூட எடுக்க வங்கிகளால் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மிக விரைவில், சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்குவது குறித்து ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவது,  கரன்சி மேலாண்மை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருப்பதால், விரைவில், கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அறிவிப்பு வெளியிடும்.

ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், 90 நாட்கள் முடிவதற்குள் மீண்டும் நாட்டில் பணப்புழக்கத்தை சீராக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏறக்குறைய எடுக்கப்பட்டு விட்டது.  அனைத்து நடவடிக்கைகளும் முடியும் தருவாயில் இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.