விக்கிவாண்டி:

விக்கிரவாண்டி இடைத்தேர்ல் பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் வேட்பாளர் ஆதரித்து ஓட்டு வேட்டையாடிய நாம் கட்சித் தலைவர் சீமான், ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது தொடர்பாக காங்கிரசார் காவல் துறையில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து சீமான் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும் என்றும்,  அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும் என பேசினார்.

சீமானின் இந்தப் பேச்சு தமிழக அரசியலில் சூட்டை கிளப்பி உள்ளது. அரசியல் கட்சியினர் சீமானின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் சீமானின் பேச்சுக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர், சீமானைத் தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி மாவட்ட காங்கிரஸ் தலைவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதையடுத்து,  ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம்தமிழர் கட்சி சீமான் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.