கொல்கத்தா:

திருமண வரவேற்பில் நிற்க அழகான சிறுமிகள் தேவை என்று ஆசை வார்த்தை காட்டி சிறுமிகளை அழைத்து சென்று பாரில் அரைகுறை ஆடையுடன் ஆட வைத்த கொடூர தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்

 

மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த ஏந்ர்த சுபிர்தாஸ். இவரது மனைவி -சிம்ரன். இந்த தம்பதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பெற்றோரிடம் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு உங்கள் மகள்களை கலந்து கொள்ள அனுப்பினால் பணம் தருகிறோம் என்றும், நிகழ்ச்சி முடிந்ததும் கொண்டு வந்து வீட்டில் விட்டுவிடுகிறோம் என ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றனர்.

ஆனால் அந்த சிறுமிகளை திருமண நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லாமல் சிலிகுரியில் செயல்படும் அவர்களது மதுபான பாருக்கு அழைத்து சென்று அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனம் ஆட சொல்லி மிரட்டியுள்ளனர்.

மகள்களை அழைத்து சென்ற தம்பதி மீது சந்தேகம் கொண்ட பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து 2 சிறுமிகளும் மீட்கப்பட்டனர். தம்பதியையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் பிடியில் சிக்கி தவித்த மேலும் சில சிறுமிகளையும் அந்த பாரில் இருந்து போலீ£ர் மீட்டுள்ளனர்.