டில்லி

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 ஆகி அதில் 1013 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று மட்டும் 427 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 31787 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 பேர் அதிகரித்து மொத்தம் 1013 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 172 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குணமடைந்தோர் எண்ணிக்கை  7919 ஆகி உள்ளது.

தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவில் 9318 பேர் பாதிக்கப்பட்டு 400 பேர் உயிர் இழந்து 1388 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக குஜராத், டில்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளன.

ஆறாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் 2162 பேர் பாதிக்கப்பட்டு 27 பேர் உயிர் இழந்து 1210 பேர் குணம் அடைந்துள்ளனர்.