சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஆயிரத்தை தாண்டியே இருந்து வருகிறது.  இன்று ஒரே நாளில் 1,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,36,697 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1,194 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,20,820 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில், 13,107 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,770 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.