பூந்தமல்லி:

க்டோபரில் கொரோனாவின் 2-வது அலை வரும்  என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தடுக்க தமிழக அரசும் முனைப்புடன் செயலாற்றி வருகிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  திருவேற்காடு நகராட்சியில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தை  காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதனை அமைச்சர் பாண்டியராஜன்,  நகராட்சிக்கு குப்பைகளை அள்ளும் பேட்டரி வாகனங்கள் மற்றும் 2 பூங்காக்களையும்  நேரடியாக திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அக்டோபரில் கொரோனாவின் 2-வது அலை வரும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். அதை  யாராலும் தடுக்க முடியாது.  நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டால், நம்மிடம்   2-வது அலை வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் நாம் மெத்தனமாக இருந்துவிட்டால் அக்டோபரில் கொரோனாவின் 2-வது அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது. இருந்தாலும், கொரோனாவை விரட்டி அடிக்கும் பணியில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும்,  எம்.ஜி.ஆர். தோற்றத்தில் நடிகர் விஜயை அவரது ரசிகர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் சுவரொட்டியாக ஒட்டி உள்ளனர். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் அவர் இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் இவ்வாறு ஒட்டி உள்ளனர். அது வரவேற்க தகுந்த விஷயம் என கருதுகிறேன்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்டு போகாத வரை எந்த பிரச்சினை யும் இல்லை. ஏனென்றால் அவர்களின் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.