சென்னை:  தமிழகத்தில் இன்று 5,958 பேர் புதிதாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும்  118 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,958 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால்,  பாதிக்கப்பட்டுள்ளோர், மொத்தம் எண்ணிக்கை 3,97,261 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,290 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,29,247 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 5,606 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,38,060 பேர் குணமடைநது வீடு திரும்பியுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 75,500 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 44,22,361-ஐ கடந்துள்ளது.

தற்போதைய நிலையில்,  52,362 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.