னாஜி

கோவாவில் இன்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

நாடெங்கும் கொரோனா பாதிப்பு கடுமையான வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இதில் மகாராஷ்டிரா மிக அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட மாநிலமாக உள்ளது

நேற்று வரை கோவா, அருணாசல பிரதேசம், மிசோரம், மணிப்பூர்,அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன் டையு நகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களில் ஒருவருக்கும் பாதிப்பின்றி இருந்தது.

எனவே இந்த பகுதிகள் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் கோவாவில் 7 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்து கோவாவில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது.

இன்று ஒரே நாளில் 7 பேர் பாதிக்கப்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.