சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,639 பேர் உயிர் இழந்து 7,49,662 பேர் குணம் அடைந்து தற்போது 11,875 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,12,970 பேர் பாதிக்கப்பட்டு 3,829 பேர் உயிர் இழந்து 2,04,842 பேர் குணம் அடைந்து தற்போது 4,299 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 47,823 பேர் பாதிக்கப்பட்டு 601 பேர் உயிர் இழந்து 46,514 பேர் குணம் அடைந்து தற்போது 708 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 47,072 பேர் பாதிக்கப்பட்டு 708 பேர் உயிர் இழந்து 45,518 பேர் குணம் அடைந்து தற்போது 846 பேர் சிகிச்சையில் உள்ளனர்.