சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,722 .பேர் உயிர் இழந்து 7,60,617 பேர் குணம் அடைந்து தற்போது 10,980 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,15,739 பேர் பாதிக்கப்பட்டு 3,854 பேர் உயிர் இழந்து 2,08,183 பேர் குணம் அடைந்து தற்போது 3,702 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 48,866 பேர் பாதிக்கப்பட்டு 613 பேர் உயிர் இழந்து 47,318 பேர் குணம் அடைந்து தற்போது 935 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 47,675 பேர் பாதிக்கப்பட்டு 715 பேர் உயிர் இழந்து 46,408 பேர் குணம் அடைந்து தற்போது 552 பேர் சிகிச்சையில் உள்ளனர்.