சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1652 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,61,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,513 பேர் உயிர் இழந்து 7,34,970 பேர் குணம் அடைந்து தற்போது 15,085 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,09,646 பேர் பாதிக்கப்பட்டு 3,783 பேர் உயிர் இழந்து 2,01,041 பேர் குணம் அடைந்து தற்போது 4,822 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 46,757 பேர் பாதிக்கப்பட்டு 592 பேர் உயிர் இழந்து 45,305 பேர் குணம் அடைந்து தற்போது 860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 46,146 பேர் பாதிக்கப்பட்டு 696 பேர் உயிர் இழந்து 44,536 பேர் குணம் அடைந்து தற்போது 914 பேர் சிகிச்சையில் உள்ளனர்.