சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் நேற்று 1619 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,71,619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,622 பேர் உயிர் இழந்து 7,47,752 பேர் குணம் அடைந்து தற்போது 12,245 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,12,504 பேர் பாதிக்கப்பட்டு 3,822 பேர் உயிர் இழந்து 2,04,328 பேர் குணம் அடைந்து தற்போது 4,354 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 47,676 பேர் பாதிக்கப்பட்டு 599 பேர் உயிர் இழந்து 46,379 பேர் குணம் அடைந்து தற்போது 698 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 46,960 பேர் பாதிக்கப்பட்டு 706 பேர் உயிர் இழந்து 45,394 பேர் குணம் அடைந்து தற்போது 860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.