வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 75,239 உயர்ந்து 25,55, 742 ஆகி இதுவரை 1,77,459 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  75,239 பேர் அதிகரித்து மொத்தம்25,55,742 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7062 அதிகரித்து மொத்தம் 1,77,459 பேர் உயிர் இழந்துள்ளனர்.  6,90,219 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  57,254 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  25,985 பேர் அதிகரித்து மொத்தம் 8,18,744 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2804 அதிகரித்து மொத்தம் 45,318 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 82,923  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 14,016 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  3698  பேர் அதிகரித்து மொத்தம் 2,04,178 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 430 அதிகரித்து மொத்தம் 21,282 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 82,923 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7705  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2729 பேர் அதிகரித்து மொத்தம் 1,83,957 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 534 அதிகரித்து மொத்தம் 24,648 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 51,600 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2474 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று 531  பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 20,796 ஆகி உள்ளது.  இங்கு நேற்று 2,667 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,58,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1541  பேர் அதிகரித்து மொத்தம் 20,080 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 53 அதிகரித்து மொத்தம் 645 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3975 பேர் குணம் அடைந்துள்ளனர்.