திருச்சி:

வியர் அமைப்புகள் சார்பில், திருச்சியில் உள்ள பிரலமான  சாலைகளில் கொரோன வைரஸ் குறித்த விழிப்புணர்வு வரைபடங்கள், வாசகங்கள் வரையப்பட்டு உள்ளன. இது பொதுமக்களி டையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.. இதனைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியக்கலைஞர்கள் சார்பில் மாநிலம் முழுவதும்  முக்கிய சாலைகளில் மக்களை கவரும் வண்ணம் கொரோனா வைரஸ்  குறித்த விழிப்புணர்வு வாசகங்கள், ஓவியங்கள் வரைந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், திருச்சி மாவட்டத்திலுள்ள ஓவியக் கலைஞர்கள் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த ஓவியங்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.