‘கட்டில்’ திரைப்படத்தை இயக்கியுள்ள இ.வி.கணேஷ்பாபு சில கரோனா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ”கரோனா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்க வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு நன்றி.
நடிகர் மனோபாலாவை வைத்து நான் இயக்கிய விளம்பரப் படம் தற்போது பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு நமது தமிழகத்தின் கரோனா விழிப்புணர்வை உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் திரைப்பிரபலங்களை வைத்தும் சில அரசு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறேன்.
விழிப்புணர்வை சீரியஸாக மட்டுமல்ல நகைச்சுவையாகவும் சொல்ல முடியும் என்பதை நான் இந்த படங்களை இயக்கும்போது செழியன் குமாரசாமி மூலமாக கற்றுக் கொண்டேன்” என கூறியுள்ளார் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு.