மும்பை:
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமிதாப் பச்சன் குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் முடிவுகள் இன்னும் வரவில்லை என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.