சென்னை:
மிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 67 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1529 ஆக இருந்தது. இதுவரை 22 போர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  685 பேர் சிகிச்சை  பெற்று வருவதாகவும், 822 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது  மேலும் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால்,  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,596-ஆக உயர்ந்துள்ளது.