சென்னை:

கொரோனா சுத்தப்படுத்தம் பணிக்காக வரும் சனி, ஞாயிறு ஆகிய 2நாட்கள் தலைமைச் செயலகம் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைமைச்செயலக ஊழியர்கள் பலரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொரனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது சனிக்கிழமையான நாளையும், நாளை மறுதினமும் தலைமைச் செயலகம் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தலைமைச்செயலகம் முழுவதும கிருமி நாசினி மூலம்  தூய்மை செய்யும் பணி நடைபெறவுள்ள தால் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள்  தலைமைச் செயலகம் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.