சென்னை

சென்னை நகரில் கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகள் 254 ஆகக் குறைந்துள்ளன.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதில் மகாராஷ்டிராவில் பாதிப்பு மிகவும் அதிகமாகவும் தமிழகம் அடுத்த இடத்திலும் உள்ளன.

தமிழகத்தில் இன்று காலை வரை 19000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் அதிகளவில் சென்னையில் அதிக அளவில் அதாவது 12000 க்கும் அதிகமானோருக்குப் பாதிப்பு உள்ளது.

சென்னை நகரில் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

இந்த பகுதிகளில் மக்கள் சென்று வரத் தடை விதிக்கப்பட்டது.

தற்போது பல பகுதிகளில் பாதிப்பு குறைந்துள்ளதால் தடை நீக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இதுவரை 897 பகுதிகள் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது நகரில் 254 தடை செய்யப்பட்ட பகுதிகள் மட்டுமே உள்ளன.