கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு நடிகர்கள் பலர் நிதியுதவும், அரிசி, பருப்பும் கொடுத்து உதவி செய்து வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு தமன்னா ரூ. 3 லட்சம் நிதி அளித்துள்ளார்.

தமன்னா வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் அளித்துள்ள நிதி ரொம்பவே குறைவு என்று தெலுங்கு ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.இது ஒருபுறம் இருக்க, நடித்து சம்பாதிக்க மட்டும் தமிழ் திரையுலகம் தேவை. ஆனால் உதவி செய்வது தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் தானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.