லண்டன்: கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பாவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் என்பதை தாண்டியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.13 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஐரோப்பாவில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸால், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அதிக உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பாவில் மட்டும் நேற்று(ஏப்ரல் 21) ஒரே நாளில் 23,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், 2,655 பேர் பலியாகினர். இதனையடுத்து, ஐரோப்பாவில் மொத்த பாதிப்பு 11,13,096 ஆக உயர்ந்தது; மொத்த பலி 1,04,491 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம் பிடித்துள்ளது. அதற்கடுத்து ஸ்பெயினும், மூன்றாவது இடத்தில் பிரான்ஸும் வருகின்றன.

ஸ்பெயினில், 2 லட்சத்து 210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 1,81,228 பேர், பிரான்ஸ் நாட்டில் 1,55,1383 பேர், ஜெர்மனியில் 1,47,065 பேர், பிரிட்டனில் 1,24,743 பேர், ரஷ்யாவில் 47,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.